உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருநள்ளார் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

திருநள்ளார் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

காரைக்கால்: காரைக்கால் திருநள்ளார் சனீஸ்வர பகவான் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திகேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.

காரைக்கால் திருநள்ளார் தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவக்கிரக ஸ்தலங்களில் சனி பரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்குகிறது. இதனால் நாட்டின் பல பகுதியில் இருந்தும் பக்தர்கள் திருநள்ளாரில் குவிகின்றனர். ஜூன்., 2 ம் தேதி  சனீஸ்வர பகவான் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு கொடிமரம் அருகில் உள்ள நந்திகேஸ்வரருக்கு மஞ்சள், சந்தனம், பால் உள்ளிட்ட பல்வேறு வகையான திரவங்களால் சிறப்பு அபிஷேகம் ஆராதனைகள் நடந்தது.  மகா தீபாராதனை நடந்து, அன்னதானம் வழக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம், தருமபுர ஆதின கட்டளை விசாரணை கந்தசாமி தம்பிரான் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !