சீரடி சாய்பாபா கோவிலில் கலசாபிஷேகம் கோலாகலம்!
ADDED :3407 days ago
புதுச்சேரி: பிள்ளைச்சாவடி சீரடி சாய்பாபா சமுதாய பிரார்த்தனை மண்டப 14ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நேற்று கோலாகலமாக நடந்தது. காலாப்பட்டு அருகில் உள்ள பிள்ளைச்சாவடி சீரடி சாய்பாபா சமுதாய பிரார்த்தனை மண்டப 14ம் ஆண்டு கும்பாபிஷேக விழா, 19ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது. 9:00 மணிக்கு ஷோடச கணபதி பூஜை, 1008 கணபதி ஹோமம், மாலை 4:15 மணிக்கு கலச பிரதிஷ்டை, முதல் கால யாகவேள்வி நடந்தது. நேற்று 21ம் தேதி காலை 5:00 மணிக்கு காகட ஆரத்தி, 6:00 மணிக்கு சப்தகுரு பூஜை, காலை 9:00 மணிக்கு கலச புறப்பாடு, 9:30 மணிக்கு கலசாபிஷேகம், பகல் 11:30 மணிக்கு பல்லக்கு உற்சவம் நடந்தது. மாலை 6:30 மணிக்கு ஊஞ்சல் உற்சவம், இரவு 7:30 மணிக்கு காவடி உற்சவம், நாட்டியாஞ்சலி நடந்தது.