உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ரமணமூர்த்தி ப்ராணபிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம்

ரமணமூர்த்தி ப்ராணபிரதிஷ்டா மகா கும்பாபிஷேகம்

திருச்சுழி: திருச்சுழி, ரமண மகரிஷி அவதரித்த புண்ய ஸ்தலம். இங்கு ரமணருக்கு, "ஸ்ரீரமண மந்த்ராலயா என்ற கோவில், கடந்த 2008ல் "மவுன துறவி ஸ்ரீ சத்யானந்த மஹாராஜ் என்பவரால் கட்டப்பட்டது. தற்சமயம், ரமணமூர்த்திக்கு பளிங்கு சிலை ராஜஸ்தானில் வடிவமைக்கப்பட்டு, குஜராத்தின் சோம்நாத் சோமேஸ்வரர் கோவிலைப்போல் வடிவமைத்து, கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேக விழாவில் விநாயகர் வழிபாடு, லிகிதநாம ஜெபம், மந்த்ர ஜெபம், பஜனை நடந்தது. முதல்கால பூஜை, பூர்ணாஹூதி, தேவார திவ்யபிரபந்தம், ரமண மகரிஷி பாடல் பாடப்பட்டது. நேற்று காலை 6 மணிக்கு ஐந்தாம் கால பூஜையுடன், அஷ்டபந்தன கும்பாபிஷேகம் துவங்கியது. ஸ்ரீகோர்ணா, குடகுமலை, யமுனை, பத்ரிநாத், கேதார் நாத், நர்மதா, துங்கபத்ரா, கிருஷ்ணா, கோதாவரி, பிரம்மபுத்திரா உட்பட 64 புண்ணிய நதி தீர்த்தங்கள் மூலம், ரமணருக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, ஆராதனை நடந்தது. சர்வமத பிரார்த்தனைகள், அன்னதானம் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !