உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எல்லைக் காளியம்மன் கோவிலில் வேம்பு அரசு திருக்கல்யாணம்

எல்லைக் காளியம்மன் கோவிலில் வேம்பு அரசு திருக்கல்யாணம்

கடலுார்: வண்டிப்பாளையம் எல்லை காளியம்மன் கோவிலில் வேம்பு அரசு திருக்கல்யாணம் நடந்தது. கடலுார், பழைய  வண்டிப்பாளையம்,  காளவாய் தெருவில் அமைந்துள்ள எல்லைக் காளியம்மன் கோவிலில் இன்று 29ம் தேதி செடல் திருவிழா  நடக்கிறது. இதற்கான விழா நேற்று ÷ வம்பு அரசு திருக்கல்யாணத்துடன் துவங்கியது. அதனையொட்டி, நேற்று காலை 8:00 மணிக்கு  அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, மகா சங்கல்பம்  நடைபெற்றது. தொடர்ந்து, எல்லைக் காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மகா  தீபாராதனை, காலை 11:00 மணிக்கு வேம்பு அரசு திருக்கல்யாண  உற்சவமும், இரவு காப்பு கட்டுதல் மற்றும் எல்லை கட்டும் உற்சவம்  நடந்தது. இன்று காலை ஊற்றுகாட்டு மாரியம்மன் கோவிலில் இருந்து கரகம்  வீதியுலாவும், பகல் 1:00 மணிக்கு அம்மனுக்கு 1,008 குடம்  நீர் அபிஷேகம், மகா தீபாராதனை மற்றும் சாகை வார்த்தலும், அதனைத் தொடர்ந்து   மாலை 4:30 மணிக்கு செடல் உற்சவமும், இரவு  அம்மன் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !