வரலட்சுமி விரதம் மாரியம்மன் கோவிலில் பூஜை
ADDED :3367 days ago
அரூர்: அரூர், பழையபேட்டை மகாசக்தி மாரியம்மன் கோவிலில், வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு, (ஆக.,12) வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு யாக பூஜைகள், சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடந்தன. பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு தாலிக்கயிறு, வளையல், குங்குமம், மஞ்சள் ஆகியவை பூஜைகள் செய்து வழங்கப்பட்டன. இதே போல், அரூரில் உள்ள ஓம்சக்தி கோவில், காளியம்மன், மேட்டுப்பட்டி மாரியம்மன், அங்காளம்மன் கோவில்களிலும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.