உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை கோவிலில் இன்று உறியடி உற்சவம்

திருவதிகை கோவிலில் இன்று உறியடி உற்சவம்

பண்ருட்டி: பண்ருட்டி அடுத்த திருவதிகை, சரநாராயண பெருமாள் கோவிலில், கோகுலாஷ்டமியை  முன்னிட்டு, பெருமாள் சிறப்பு அலங்காரத்தில்,  பக்தர்களுக்கு, இன்று (26ம் தேதி) அருள்பாலிக்கிறார். விழாவை முன்னிட்டு, நேற்று இரவு, உற்சவர் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது.  தொடர்ந்து, இன்று (26ம் தேதி) காலை 6:30  மணிக்கு, சுப்ரபாதம், 7:00 மணிக்கு, நித்யபடி பூஜை, மாலை 6:00 மணிக்கு, உறியடி உற்சவம்  நடக்கிறது. உற்சவர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இரவு, உற்சவர் பெருமாள், இந்திர விமானத்தில் வீதியுலா  நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !