தொரவி சிவன் கோவிலில் பிரதோஷ சிறப்பு வழிபாடு
ADDED :3367 days ago
விக்கிரவாண்டி: தொரவி சிவன் கோவிலில் பிரதோஷ வழிபாடு நடந்தது. விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த தொரவி கைலாசநாதர் ÷ காவிலில், பிரதோஷத்தை முன்னிட்டு, விநாயகர், தட்சிணாமூர்த்தி, சிவகாமி உடனுறை நடராஜர், நந்தீஸ்வரர் ஆகிய சுவாமிகளுக்கு சிறப்பு அபி ஷேகம் நடந்தது. பின், சம்பங்கி மற்றும் செவ்வரளி பூ மாலை, அருகம்புல் மாலையுடன் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது. அபிஷேகம் மற்றும் பூஜைகளை, புதுச்சேரி சிவனடியார் சரவணன் செய்தார். முன்னதாக, புதுச்சேரி சிவனடியார்கள் சாந் திஆனந்தன், மாலதி, அர்ச்சனா, விஜயலட்சுமி, கவி ஆகியோர் திருவாசகம் முற்றோதினர். தொரவி தொழிலதிபர் சுப்ரமணி, ஞானபிரகாசம், ஊராட்சி தலைவி நாகேஸ்வரி சங்கர், ஏனாதிநாத நாயனார் அறக்கட்டளை நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.