ராமநாதபுரம் பெரிய மாரியம்மன் கோயிலில் வருண ஜபம்
ADDED :3434 days ago
ராமநாதபுரம்: மழை பெய்ய வேண்டி ராமநாதபுரம் பெரிய மாரியம்மன் கோயிலில் வருண ஜபம் சிறப்பு யாக வேள்வி நடைபெற்றது. ராமநாதபுரத்தில் சேதுபதி சமஸ்தானத்திற்கு சொந்தமான பழமையான பெரிய மாரியம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டியும், உலக நன்மைக்காகவும் வருண ஜபம் மற்றும் சிறப்பு யாக வேள்வி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.