மருதீஸ்வரர் கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு
ADDED :3577 days ago
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தாலுகா வளத்தியில் மங்களாம்பிகை சமேத மருதீஸ்வரர் கோவிலில் கார்த்திகை மாத சனி மகாபிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி, சுவாமிக்கு பால், தயிர், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட திரவியங்களால் சிறப்பு அபிேஷகமும், தீபாரதனையும் நடந்தது. மருதீஸ்வரர் புஷ்ப அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். சிவனடியார் ஆத்மலிங்கம் பன்னீறு திருமுறை ஓதும் நிகழ்ச்சியும் நடந்தது.