ஜெபமாலை அன்னை ஆலய விழா தேர்பவனி!
ADDED :5314 days ago
ராமநாதபுரம்: ராமநாதபுரம் ஜெபமாலை அன்னை ஆலய விழா கொடியேற்றம், செப்.,30ம் தேதி நடந்தது. இதையொட்டி தினமும் சிறப்பு திருப்பலி, பல்வேறு தலைப்புகளில் மறையுரை நடந்தது. அக்.,8ம் தேதி இரவு திருப்பலியை தொடர்ந்து அன்னையின் தேர்பவனி நடந்தது. ஆலய வளாகத்திலிருந்து துவங்கிய பவனி அரண்மனை, சாலைத்தெரு வழியாக ஆலயத்தை வந்தடைந்தது. நேற்று திருப்பலியும், அதை தொடர்ந்து புதுநன்மை திருப்பலியும் நடந்தது. மாலையில் நற்கருணை பவனி, கொடியிறக்கம் நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாதிரியார்கள் இருதயராஜ், ஜஸ்டின் திரவியம், பங்கு மக்கள் செய்திருந்தனர்.