உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்

திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம்

பண்ருட்டி : பண்ருட்டி திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் ஏகதின பிரம்மோற்சவம் நடந்தது. கடலூர் மாவட்டம், பண்ருட்டி திருவதிகை ஹேமாம்புஜ வல்லி தாயார் சமேத சரநாராயண பெருமாள் கோவிலில் நேற்று ஏக தின பிரம்மோற்சவத்தையொட்டி அதிகாலை 4 மணிக்கு சுப்ரபாரதம், 4.30 மணியளவில் தோமாலை சேவை, காலை 5 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. காலை 6 மணிக்கு மூலவர் சரநாராயண பெருமாள், தாயார், சயன நரசிம்மர் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள், அர்ச்சனைகள் நடந்து மூலவர் பெருமாள் நெய்தீப தரிசனத்தில் திருமலை சீனுவாசபெருமாள் அலங்காரத்தில் அருள்பாலித்தார். காலை 8 மணிக்கு பெருமாள் அம்ச வாகனம், 9 மணிக்கு சிம்ம வாகனம், 10 மணிக்கு அனுமன் வாகனம், 11 மணிக்கு சேஷவாகனம், 12 மணிக்கு கருட வாகனத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிற்பகல் 3 மணிக்கு யானை வாகன சேவையும், 4 மணிக்கு சூர்ணோத்சவம், 5 மணிக்கு குதிரை வாகன சேவை, மாலை 6 மணிக்கு திருத்தேர் உள்புறப்பாடு, இரவு 7 மணிக்கு தீர்த்தவாரி, 7.30 மணிக்கு கொடியிறக்கம் நடந்தது. திட்ட செயலாக்கத் துறை அமைச்சர் சம்பத் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி நாகராஜன், தலைமை அர்ச்சகர் ஸ்ரீராமன் பட்டாச்சாரியார், ஸ்ரீதர், விக்னி பட்டாச்சாரியார் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !