பொதுத்தேர்வில் வெற்றிபெற வேண்டி மாணவர்கள் பழநியில் மொட்டை!
ADDED :3146 days ago
பழநி: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றிபெற வேண்டி, கோவையைச் சேர்ந்த 48 மாணவர்கள் பழநிகோயிலில் முடிகாணிக்கை (மொட் டை) செலுத்தினர்.பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 8ல் துவங்கி 30ம் தேதி வரை நடக்கிறது. கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவர்கள் 48 பேர் ஆசிரியர்களுடன் நேற்று பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வந்தனர்.பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறவேண்டும் என வேண்டிமுடிகாணிக்கை செலுத்தினர். பின், மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர். மாணவர்கள் கூறுகையில்,”பல பள்ளிகளில் தேர்வில் வெற்றிபெற சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. அத்துடன் முருகப்பெருமான் அருள்வேண்டி ’மொட்டை’அடித்து நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளோம்,” என்றனர்.