உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்சி ராமானுஜர் 1,000வது அவதார பெருவிழா

திருச்சி ராமானுஜர் 1,000வது அவதார பெருவிழா

திருச்சி: ராமானுஜரின், 1,000வது அவதார பெருவிழா ஸ்ரீரங்கம்  ரெங்கநாதர் கோவிலில், சிறப்பாக நடந்தது.ஸ்ரீபெரும்புதூரில், 1017ம் ஆண்டு பிறந்த ராமானுஜர், காஞ்சிபுரம், திருமலை
திருப்பதி போன்ற வைணவ தலங்களில் தங்கி, ஆன்மிக பணியாற்றிய பின், திருச்சி ஸ்ரீரங்கத்தில் தங்கி, ரெங்கநாதருக்கு பணிவிடை செய்தார்.

மே, 1ம் தேதி, ராமானுஜர் அவதரித்த, 1,000வது திருநட்சத்திர திருநாள். இதை கொண்டாடும் வகையில், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில், ராமானுஜரின், 1,000வது அவதார பெருவிழா, ஏப்.,
28ல் துவங்கியது.வரும், 7ம் தேதி வரை நடக்கும் விழாவை ஒட்டி, ஆயிரங்கால் மண்டபத்தில், ராமானுஜரின், 9 அடி உயர சிலை அமைக்கப்பட்டு, தினமும் பக்தி இசை நிகழ்ச்சிகள், பஜனை,
உபன்யாசம், நாட்டிய நாடகம் போன்றவை  நடக்கின்றன. ராமானுஜர் அவதரித்த நட்சத்திர தினமான நேற்று, உற்சவர் ராமானுஜரை, பல்லக்கில், சித்திரை வீதிகளில்  ஊர்வலமாக கொண்டு வந்தனர்.தொடர்ந்து, ராமானுஜர் உருவம்  பதித்த சிறப்பு தபால் உறை வெளியிடப்பட்டது. உறையை, மத்திய மண்டல தபால் துறை இயக்குனர் நடராஜன் வெளியிட, ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் பெற்று கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !