லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் தேரோட்டம்
ADDED :3116 days ago
கடலுார்: சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவத்தையொட்டி தேரோட்டம் நடந்தது. தவளக்குப்பம் அடுத்த சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 1ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா நடக்கிறது. நேற்று காலை சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்து, தேருக்கு எழுந்தருளச் செய்து தேரோட்டம் நடந்தது. பக்தர்கள் திரளாக பங்கேற்று வடம் பிடித்து தேர் இழுத்து, சுவாமி தரிசனம் செய்தனர். இன்று (10ம் தேதி) மாலை திருமஞ்சனம், இரவு புராணம் வாசித்தல் நிகழ்ச்சி, நாளை 11ம் தேதி மாலை 6:00 மணிக்கு புஷ்பயாகம், 12ம் தேதி இரவு 8:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.