உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நெற்றியில் திருமண் இடுவது எதற்கு?

நெற்றியில் திருமண் இடுவது எதற்கு?

ஒருவரைப் பார்க்கிற போது முதலில் அவர் முகம் பார்ப்போம். அப்படிப் பார்க்கிற வேளையில், சட்டெனத் தட்டுப்படுவது அவரின் நெற்றிதான். அந்த நெற்றி நிர்மலமாக, ஒன்றுமில்லாததாக இருந்தால் நன்றாகவா இருக்கும்? நெற்றியில் விபூதியோ, கோபி சந்தனமோ, திருமண்ணோ (ஸ்ரீ சூர்ணத்துடன்) அவரவர் சம்பிரதாயப்படி இட்டுக் கொள்ள வேண்டும். நெற்றியில் (ஸ்ரீ சூர்ணத்துடன்) திருமண் வைத்திருப்பதற்கு உதாரணமாக சாட்சாத் கண்ணனையே எடுத்துக் கொள்வோம். அவனே எப்போதும் திருமண் (ஸ்ரீ சூர்ணத்துடன்) இட்டுக் கொண்டுதான் காட்சி தருகிறான். திருமண் என்பது, பகவானின் திருவடி. அவனுடைய திருவடியை நாம் நம் சிரசில், நெற்றியில் சூடிக் கொள்வதாக ஐதீகம். ஆனால், பகவானே தன் நெற்றியில் திருமண் இட்டுக் கொண்டிருக்கிறானே! அது எவருடைய திருவடி? கம்ப ராமாயணத்தில், சீதா கல்யாணத்தின் போது, ஸ்ரீராமபிரானை விவரிக்கிற வேளையில், தன் திருநாமத்தை தானே சார்த்தி... எனப் போற்றுகிறார் கம்பசக்கரவர்த்தி.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !