மார்கழி அதிகாலையில் நீராடுவதன் நன்மை!
ADDED :2862 days ago
மார்கழி அதிகாலையில் திருவெம்பாவை பாடினால் நமது ஆத்மா சுத்தமடைகிறது. ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்களில் சிக்கியுள்ளது நமது ஆத்மா. இதனால் இருளில் கிடந்து உழல்கிறது. திருவெம்பாவை பாடுவதால், இறைவனின் திருவருளைப் பெற்று ஆத்மா பரிசுத்தம் அடைகிறது. ஆத்மசுத்தம் என்றால் மன சுத்தம். மனம் சுத்தமானால் வாழ்வில் எந்தப் பிரச்னையும் வராது. நீராட வா என்று அழைப்பது வெறுமனே குளத்தில் போய் குளிப்பதை மட்டும் குறிப்பதல்ல. மனதிலுள்ள மாசுகளைக் கழுவுவதையே நீராட்டம் என்ற வார்த்தையால் குறிக்கிறார் திருவெம்பாவை ஆசிரியர் மாணிக்கவாசகர்.