உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பழநி முருகன்கோயில் உண்டியல் வசூல் ரூ1.76 கோடி

பழநி முருகன்கோயில் உண்டியல் வசூல் ரூ1.76 கோடி

பழநி: பழநி முருகன்கோயில் உண்டியலில், பதினான்கு நாட்களில் ரூ. ஒருகோடியே 76 லட்சத்து 62ஆயிரம் வசூலாகியுள்ளது. பழநி மலைக்கோயிலில் கார்த்திகை மண்டபத்தில் உண்டியல் எண்ணிக்கை நடந்தது. இதில் ரொக்கமாக ரூ.ஒரு கோடியே 76 லட்சத்து, 62 ஆயிரத்து 463, தங்கம் -990 கிராம், வெள்ளி- 11,920 கிராம், வெளிநாட்டு கரன்சி- 1,342 கிடைத்துள்ளது. இணைஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா, மதுரை உதவிஆணையர் இளையராஜா வங்கிப் பணியாளர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !