உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பூர் கோவில் சிலைகள் விவரம் வெளியிட கோரிக்கை

திருப்பூர் கோவில் சிலைகள் விவரம் வெளியிட கோரிக்கை

திருப்பூர் : திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி மற்றும் வீரராகவப் பெருமாள் கோவில்களில் உள்ள, உற்சவர் சிலைகள் மற்றும் உபயதாரர் விவரங்களை வெளியிட வேண்டும் என்று, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, நல்லுார் நுகர்வோர் நல மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கை: விஸ்வேஸ்வரர் கோவிலில், 33 உற்சவர் சிலைகள்; 120 கற்சிலைகள் உள்ளது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. வீரராகவப் பெருமாள் கோவிலில், 21 உற்சவர் சிலைகள்; 13 கற்சிலைகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி, நகை, ஆபரணங்கள் விவரம் வெளியிட முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இரண்டு கோவில்களிலும் உள்ள உற்சவர் சிலைகள் குறித்தும், அவற்றின் உபயதாரர்கள் குறித்தும் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !