காளியம்மன் கோயில் திருவிழா
ADDED :2841 days ago
வருஷநாடு,கடமலைக்குண்டு, கரட்டுப்பட்டி, மயிலாடும்பாறை, மந்திச்சுனை, தாழையூத்து ஆகிய பகுதிகளில் காளியம்மன் கோயில் பங்குனி திருவிழா நடந்தது. இதில் அம்மனுக்கு அக்னி சட்டி, பால்குடம் எடுத்து பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர். பின்னர் முளைப்பாரி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. இரவில் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. கடமலைக்குண்டு இன்ஸ்பெக்டர் சக்திவேல், எஸ்.ஐ., பிச்சைமணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.