குன்னூரில் அந்தோணியார் குருசடியில் ஆண்டு திருவிழா
குன்னூர்: குன்னூர் வெலிங்டன் சின்ன வண்டிச்சோலையில், 114வது ஆண்டு அந்தோணியார் குருசடி திருவிழா விமரிசையாக நடந்தது.
குன்னூர் வெலிங்டன் கன்டோன்மென்ட் வாரியத்திற்கு உட்பட்ட சின்ன வண்டிச்சோலையில், புனித அந்தோணியார் குருசடி உள்ளது. 114வது ஆண்டு திருவிழா கடந்த மாதம், 29ம் தேதி
சிறப்பு திருப்பலி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து ஜெப ஆராதனை, சிறப்பு திருப்பலி, நவநாள் ஆகியவைநடந்தன.
திருவிழா நாளில், 11:30 மணிக்கு திருநாள் சிறப்பு திருப்பலி, பேரக்ஸ் புனித அந்தோணியார் தேவாலய பங்கு தந்தை தலைமையில் நடந்தது. தொடர்ந்து அன்பின் விருந்து, நவநாள்
ஜெபம் ஆகியவை நடந்தன.
மாலையில், புனிதரின் சுரூபம் அலங்கார தேர்பவனி குருசடியில் துவங்கி, பேரக்ஸ், எம்.ஆர். சி.,, வழியாக எம்.எச்., வரை சென்று மீண்டும் குருசடியை அடைந்தது.
புனித அந்தோணியார் பஜனை சங்கத்தினரின் ஜெபம், புனிதர்களின் பக்தி பாடல்கள் பாடப் பட்டன. தோழமை பஜனை சங்கத்தினரின் பக்தி பாடல்கள் மங்கள பாட்டுடன் விழா நிறைவு பெற்றது.
விழா ஏற்பாடுகளை பங்கு தந்தை அந்தோணிசாமி, துணை பங்கு தந்தையர் ஆனந்த், சாந்த குமார், ஸ்டீபன் மற்றும் அந்தோணியார் பஜனை சங்கத்தினர், ஊர்பொதுமக்கள் செய்தி ருந்தனர்.