தோத்திர பாடல்கள் பகுதி-2
26. சிவசக்தி புகழ் ராகம்-தன்யாசி தாளம்-சதுஸ்ர ஏகம் ஓம், சக்திசக்தி சக்தியென்று சொல்லு-கெட்டசஞ்சலங்கள் யாவினையும் கொல்லு;சக்திசக்தி சக்தியென்று சொல்லி-அவள்சந்நிதியி லேதொழுது நில்லு. 1 ஓம்,சக்திமிசை பாடல்பல பாடு-ஓம்சக்திசக்தி என்று தாளம் போடு;சக்திதருஞ் செய்கை நிலந் தனிலே-சிவசக்திவெறி கொண்டுகளித் தாடு. 2 ஓம்,சக்திதனை யேசரணங் கொள்ளு என்றும்சாவினுக்கொ ரச்சமில்லை தள்ளு,சக்திபுக ழாமமுதை அள்ளு-மதுதன்னிலினிப் பாகுமந்தக் கள்ளுன. 3 ஓம், சக்திசெய்யும் புதுமைகள் பேசு-நல்லசக்தியற்ற பேடிகளை ஏசு;சக்திதிருக் கோயிலுள்ள மாக்கி-அவள்தந்திடுநற் குங்குமத்தைப் பூசு. 4 ஓம், சக்தியினைச் சேர்ந்ததிந்தச் செய்கை -இதைச்சார்ந்துநிற்ப தேநமக்கோ ருய்கை;சக்தியெனும் இன்பமுள்ள பொய்கை-அதில்தண்ணமுத மாரிநித்தம் பெய்கை. 5 ஓம்,சக்திசக்தி சக்தியென்று நாட்டு-சிவசக்தியருள் பூமிதனில் காட்டு;சக்திபெற்ற நல்லநிலை நிற்பார்-புவிச்சாதிகளெல் லாமதனைக் கேட்டு. 6 ஓம்,சக்திசக்தி சக்தியென்று முழங்கு-அவள்தந்திரமெல் லாமுலகில் வழங்கு;சக்தியருள் கூடிவிடு மாயின்-உயிர்சந்ததமும் வாழும்நல்ல கிழங்கு 7 ஓம்,சக்திசெய்யுந் தொழில்களை எண்ணு நித்தம்சக்தியுள்ள தொழில்பல பண்ணு;சக்திதனை யேயிழந்து விட்டால்-இங்குசாவினையும் நோவினையும் உண்ணு. 8 ஓம், சக்தியரு ளாலுலகில் ஏறு-ஒருசங்கடம்வந் தாலிரண்டு கூறு;சக்திசில சோதனைகள் செய்தால்-அவள்தண்ணருளென் றேமனது தேறு. 9 ஓம்,சக்திதுணை என்று நம்பி வாழ்த்து-சிவசக்திதனையே அகத்தில் ஆழ்த்து;சக்தியும் சிறப்பும் மிகப் பெறுவாய்-சிவசக்தியருள் வாழ்கவென்று வாழ்த்து! 10 27. பேதை நெஞ்சே! இன்னுமொரு முறைசொல்வேன்,பேதை நெஞ்சே!எதற்குமினி உளைவதிலே பயனொன் றில்லை;முன்னர்நம திச்சையினாற் பிறந்தோ மில்லை;முதலிறுதி இடைநமது வசத்தில் இல்லை;மன்னுமொரு தெய்வத்தின் சக்தி யாலேவையகத்திற் பொருளெல்லாம் சலித்தல் கண்டாய்!பின்னையொரு கவலையுமிங் கில்லை,நாளும்பிரியாதே விடுதலையைப் பிடித்துக் கொள்வாய்! 1 நினையாத விளைவெல்லாம் விளைந்து கூடி,நினைத்தபயன் காண்பதவன் செய்கையன்றோ?மனமார உண்மையினைப் புரட்டலாமோ?மஹாசக்தி செய்தநன்றி மறக்க லாமோ?எனையாளும் மாதேவி,வீரார் தேவி,இமையவருந் தொழுந்தேவி, எல்லைத் தேவி,மனைவாழ்வு பொருளெல்லாம் வகுக்குந் தேவி,மலரடியே துணையென்று வாழ்த்தாய் நெஞ்சே! 2 சக்தியென்று புகழ்ந்திடுவோம் முருகன் என்போம்;சங்கரனென் றுரைத்திடுவோம்,கண்ணன் என்போம்;நித்தியமிங் கவள்சரணே நிலையென் றெண்ணி,நினக்குள்ள குறைகளெல்லாந் தீர்க்கச் சொல்லிபக்தியினாற் பெருமையெல்லாம் கொடுக்கச் சொல்லி,பசிபிணிக ளில்லாமற் காக்கச் சொல்லி,உத்தமநன் னெறிகளிலே சேர்க்கச் சொல்லி,.உலகளந்த நாயகிதாள் உரைப்பாய்,நெஞ்சே! 3 செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்.சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்;கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்.கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தேந்லலவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்.நமோநமஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே! 4 பாட்டினிலே சொல்லுவதும் அவள்சொல் லாகும்;பயனனிறி உரைப்பாளோ? பாராய், நெஞ்சே!கேட்டதுநீ பெற்றிடுவாய்,ஐயமில்லை;கேடில்லை,தெய்வமுண்டு,வெற்றி யுண்டு;மீட்டுமுனக் குரைத்திடுவேன், ஆதிச சக்தி,வேதத்தின் முடியினிலே விளங்கும் சதி,நாட்டினிலே சனகனைபோல் நமையும் செய்தாள்;நமோநம,ஓம் சக்தி யென நவிலாய் நெஞ்சே! 5 28. மஹா சக்தி சந்திர னொளியில் அவளைக் கண்டேன்,சரண மென்று புகுந்து கொண்டேன்;இந்திரி யங்களை வென்று விட்டேன்,எனதென் ஆசையைக் கொன்று விட்டேன். 1 பயனெண் ணாமல் உழைக்கச் சொன்னாள்,பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்;துயரி லாதெனைச் செய்து விட்டாள்,துன்ப மென்பதைக் கொய்து விட்டாள். 2 மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்;வீசி நிற்கும் வளியைச் செய்தாள்;வான்க ணுள்ள வெளியைச் செய்தாள்,வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள். 3 29. நவராத்திரிப் பாட்டு (உஜ்ஜயினீ) உஜ்ஜயினீ நித்ய கல்யாணீ!ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி ஓம்சக்தி (உஜ்ஜயினீ) உஜ்ஜய காரண சங்கர தேவீஉமா ஸரஸ்வதீ ஸ்ரீ மாதா ஸா.(உஜ்ஜயினீ) வாழி புனைந்து மஹேசுவர தேவன்,தோழி பதங்கள் பணிந்து துணிந்தனம், (உஜ்ஜயினீ) சத்ய யுகத்தை அகத்தி லிருத்தி,திறத்தை நமக்கரு ளிச்செய்யும் உத்தமி. (உஜ்ஜயினீ) 30. காளிப் பாட்டு யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;தீது நன்மை யெல்லாம்-காளி!-தெய்வ லீலை யன்றோ;பூத மைந்தும் ஆனாய்-காளி!-பொறிக ளைந்தும் ஆனாய்;போத மாகி நின்றாய்-காளி!-பொறியை விஞ்சி நின்றாய் இன்ப மாகி விட்டாய்-காளி!-என்னு ளேபு குந்தாய்பின்பு நின்னை யல்லால்-காளி!-பிறிது நானும் உண்டோ?அன்ப ளித்து விட்டாய்-காளி!-ஆண்மை தந்து விட்டாய்;துன்பம் நீக்கிவிட்டாய்-காளி!-தொல்லை போக்கிவிட்டாய் 31. காளி ஸ்தோத்திரம் யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை.போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்ஆதிசக்தி,தாயே!-என் மீ-தருள் புரிந்து காப்பாய். எந்த நாளும் நின்மேல்-தாயே!இசைகள் பாடி வாழ்வேன்;கந்த னைப்ப யந்தாய்,-தாயே!கருணை வெள்ள மானாய்!மந்த மாரு தத்தில்-வானில்-மலையி னுச்சி மீதில்,சிந்தை யெங்கு செல்லும்-அங்குன்-செம்மை தோன்று மன்றே கர்ம் யோக மொன்றே-உலகில்-காக்கு மென்னும் வேதம்;தர்ம நீதி சிறிதும்-இங்கே-தவற லென்ப தின்றி,மர்ம மான பொருளாம்-நின்தன்-மலர டிக்கண் நெஞ்சம்,செம்மை யுற்று நாளும்-சேர்ந்தே-தேசு கூட வேண்டும். என்த னுள்ள வெளியில்-ஞானத்-திரவி யேற வேண்டும்;குன்ற மொத்த தோளும்-மேருக்-கோல மொத்த வடிவும்,நன்றை நாடு மனமும்-நீயெந்-நாளு மீதல் வேண்டும்;ஒன்றை விட்டு மற்றோர்-துயரில்-உழலும் நெஞ்சம் வேண்டா. வான கத்தி னொளியைக்-கண்டே-மனம கிழ்ச்சி பொங்கி,யானெ தற்கும் அஞ்சேன்-ஆகி-எந்த நாளும் வாழ்வேன்;ஞான மொத்த தம்மா!-உவமை-நானு ரைக்கொ ணாதாம்!வான கத்தி னொளியின்-அழகை-வாழ்த்து மாறி யாதோ? ஞாயி றென்ற கோளம்-தருமோர்-நல்ல பேரொ ளிக்கேதேய மீதோர் உவமை-எவரே-தேடி யோத வல்லார்?வாயி னிக்கும் அம்மா!-அழகாம்-மதியின் இன்ப ஒளியைநேயமோ டுரைத் தால்-ஆங்கே-நெஞ்சி ளக்க மெய்தும். காளி மீது நெஞ்சம்-என்றும்-கலந்து நிற்க வேண்டும்;வேளை யொத்த விறலும், பாரில்-வேந்த ரேத்து புகழும்,யாளி யொத்த வலியும்-என்றும்-இன்பம் நிற்கும் மனமும்,வாழி யீதல் வேண்டும்-அன்னாய்!வாழ்க நின்தன் அருளே! 32. யோக சித்தி் வரங் கேட்டல் விண்ணும் கண்ணும் தனியாளும்-எங்கள்வீரை சகித நினதருளே என்தன்கண்ணுங் கருதும் எனக்கொண்டு-அன்புகசிந்து கசிந்து கசிந்துருகி-நான்பண்ணும் பூசனை கள்எல்லாம்-வெறும்பாலை வனத்தில் இட்ட நீரோ?-உனக்கெண்ணுஞ் சிந்தை யொன்றிலையோ?-அறிவில்லா தகிலம் அளிப்பாயோ? நீயே சரணமென்று கூவி-என்தன்நெஞ்சிற் பேருறுதி கொண்டு-அடிதாயே!யெனக்குமிக நிதியும்-அறந்தன்னைக் காகுமொரு திறனும்-தருவாயே யென்று பணிந் தேத்திப்-பலவாறா நின்றுபுகழ் பாடி-வாய்ஓயே னாவதுண ராயோ?-நினதுண்மை தவறுவதொர் உலகோ? காளீ வலியசா முண்டி-ஓங்காரத் தலைவியென் னிராணி-பலநாளிங் கெனையலைக்க லாமோ?-உள்ளம்நாடும் பொருளடைதற் கன்றோ?-மனல்த்தாளில் விழுந்தபயங் கேட்டேன்-அதுதாரா யெனிலுயிரைக் தீராய்-துன்பம்நீளில் உயிர்தரிக்க மாட்டேன்-கருநீலியென் னியல்பறி யாயோ? தேடிச் சோறுநிதந் தின்று-பலசின்னஞ் சிறுகதைகள் பேசி-மனம்வாடித் துன்பமிக உழன்று-பிறர்வாடப் பலசெயல்கள் செய்து-நரைகூடிக் கிழப்பருவ மெய்தி-கொடுங்கூற்றுக் கிரையெனப்பின் மாயும்-பலவேடிக்கை மனிதரைப் போலே-நான்வீழ்வே னென்று நினைத் தாயோ? நின்னைச் சிலவரங்கள் கேட்பேன்-அவைநேரே இன்றெனக்குத் தருவாய்-என்தன்முன்னைத் தீயவினைக் பயன்கள்-இன்னும்மூளா தழிந்திடுதல் வேண்டும்-இனிஎன்னைப் புதியவுயி ராக்கி-எனக்கேதுங் கவலையறச் செய்து-மதிதன்னை மிகப்தெளிவு செய்த-எனுறும்சந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய் தோளை வலியுடைய தாக்கி-உடற்சோர்வும் பிணிபலவும் போக்கி-அரிவாளைக் கொண்டுபிளந் தாலும்-கட்டுமாறா வுடலுறுதி தந்து-சுடர்நாளைக் கண்டதோர் மலர்போல்-ஒளிநண்ணித் திகழும்முகந் தந்து-மதவேளை வெல்லும்முறை கூறித்-தவமேன்மை கொடுத்தருளல் வேண்டும். எண்ணுங் காரியங்க ளெல்லாம்-வெற்றியேறப் புரிந்தருளல் வேண்டும்-தொழில்பண்ணப் பெருநிதியும் வேண்டும்-அதிற்பல்லோர் துணைபுரிதல் வேண்டும்-சுவைநண்ணும் பாட்டினொடு தாளம்-மிகநன்றா வுயத்தழுந்தல் வேண்டும்-பலபண்ணிற் கோடிவகை இன்பம்-நான்பாடத் திறனடைதல் வேண்டும். கல்லை வயிரமணி யாக்கல்-செம்பைக்கட்டித் தங்கமெனச் செய்தல்-வெறும்புல்லை நெல்லெனப் புரிதல்-பன்றிப்போத்தைச் சிங்கவே றாக்கல்-மண்ணைவெல்லத் தினிப்புவரச் செய்தல்-எனவிந்தை தோன்றிட இந்நாட்டை-நான்தொல்லை தீர்த்துயர்வு கல்வி-வெற்றிசூழும் வீரமறி வாண்மை. கூடுந் திரவியத்தின் குவைகள்-திறல்கொள்ளுங் கோடிவகைத் தொழில்கள்-இவைநாடும் படிக்குவினை செய்து-இந்தநாட்டோர் கீர்த்தியெங்கு மோங்கக்-கலிசாடுந் திறனெனக்குத் தருவாய்-அடிதாயே!உனக்கரிய துண்டோ?-மதிமூடும் பொய்மையிரு ளெல்லாம்-எனைமுற்றும் விட்டகல வேண்டும். ஐயந் தீர்ந்துவிடல் வேண்டும்-புலைஅச்சம் போயொழிதல் வேண்டும்-பலபையச் சொல்லுவதிங் கென்னே! முன்னைப்பார்த்தன் கண்ணனிவர் நேரா-எனைஉய்யக் கொண்டருள வேண்டும்-அடிஉன்னைக் கோடிமுறை தொழுதேன்-இனிவையத் தலைமையெனக் கருள்வாய்-அன்னைவாழி!நின்னதருள் வாழி! ஓம் காளி!வலிய சாமுண்டீ!ஓங்காரத் தலைவி! என்இராணி! 33. மஹா சக்தி பஞ்சகம் கரணமுந் தனுவும் நினக்கெனத் தந்தேன்,காளிநீ காத்தருள் செய்யே;மரணமும் அஞ்சேன்;நோய்களை அஞ்சேன்;மாரவெம் பேயினை அஞ்சேன்.இரணமுஞ் சுகமும்,பழியுநற் புகழும்யாவுமோர் பொருளெனக் கொள்ளேன்;சரணமென் றுனது பதமலர் பணிந்தேன்தாயெனைக் காத்தலுன் கடனே. 1 எண்ணிலாப் பொருளும்,எல்லையில்,வெளியும்யாவுமா நின்தனைப் போற்றி,மணிணிலார் வந்து வாழ்த்தினுஞ் செறினும்மயங்கிலேன்;மனமெனும் பெயர்கொள்கண்ணிலாப் பேயை எள்ளுவேன்;இனியெக்காலுமே அமைதியி லிருப்பேன்;தண்ணிலா முடியிற் புனைந்துநின் றிலகும்தாயுனைச் சரண்புகுந் தேனால். 2 நீசருக் கினிதாந் தனத்தினும், மாதர்நினைப்பினும்,நெறியிலா மாக்கள்மாசுறு பொய்ந்நட் பதனிலும், பன்னாள்மயங்கினேன்;அதையினி மதியேன்;தேசுறு நீல நிறத்தினாள்,அறிவாய்ச்சிந்தையிற் குலவிடு திறத்தாள்.வீசுறுங் காற்றில் நெருப்பினில் வெளியில்விளங்குவாள் தனைச்சரண் புகுந்தேன். 3 ஐயமுந் திகப்புந் தொலைந்தன; ஆங்கேஅச்சமுந் தொலைந்தது;சினமும்பொய்யுமென் றினைய புன்மைக ளெல்லாம்போயின; உறுதிநான் கண்டேன்,வையமிங் கனைத்தும் ஆக்கியும் காத்தும்மாய்த்துமே மகிழ்ந்திடு தாயைத்துய்யவெண் ணிறத்தாள் தனைக்கரி யவளைத்துணையெனத் தொடர்ந்தது கொண்டே. 4 தவத்தினை எளிதாப் புரிந்தனள், யோகத்தனிநிலை எளிதெனப் புரிந்தாள்;சிவத்தினை இனிதாப் புரிந்தனள்,மூடச்சித்தமும் தெளிவுறச் செய்தாள்;பவத்தினை வெறுப்ப அருளினள், நானாம்பான்மை கொன் றவன்மயம் புரிந்தாள்;அவத்தினைக் களைந்தாள் அறிவென விளைந்தாள்,அநந்தமா வாழ்கஇங் கவளே! 5 34. மஹாசக்தி வாழ்த்து விண்டு ரைக்க அறிய அரியதாய்விவிந்த வான வெளியென நின்றனை;அண்ட கோடிகள் வானில் அமைத்தனை;அவற்றில் எண்ணற்ற வேகஞ் சமைத்தனை;மண் டலத்தை அணுவணு வாக்கினால்,வருவ தெத்தனை அததனை யோசனைகொண்ட தூரம் அவற்றிடை வைத்தனை,கோலமே!நினைக் காளியென் றேத்துவேன். 1 நாடு காக்கும் அரசன் தனையந்தநாட்டு ளோர்அர சென்றறி வார்எனில்,பாடு தண்டைக் குழந்தை தனக்கிதம்பண்ணும் அப்பன் அவனென் றறிந்திடும்;கோடி யண்டம் இயகி யளிக்கும்நின்கோலம் ஏழை குறித்திட லாகுமோ?நாடி யிச்சிறு பூமியிற் காணுநின்நலங்கள் ஏத்திட நல்லருள் செய்வே. 2 பரிதி யென்னும் பொருளிடை யேய்ந்தனை,பரவும் வெய்ய கதிரெனக் காய்ந்தனை;கரிய மேகத் திளெனச் செல்லுவை,மாலு மின்னென வந்துயிர் கொல்லுவை;சொரிய்ம நுரெனப் பல்லுயிர் போற்றுவை,சூழும் வெள்ள மெனவுயிர் மாற்றுவை;விரியும் நீள்கட லென்ன நிறைந்தனை,வெல்க காளி யென தம்மை வெல்கவே. 3 வாயு வாகி வெளியை அளந்தனை,வாழ்வெ தற்கும் உயிர்நிலை ஆயினை,தேயு வாகி ஒளிருள் செய்குவை,செத்த வற்றைக் கருப்பொருள் ஆக்குவை;பாயு மாயிரஞ் சக்திக ளாகியேபாரி லுள்ள தொழில்கள் இயற்றுவை;சாயும் பல்லுயிர் கொல்லுனைவ,நிற்பனதம்மைக் காத்துச் சுகம்பல நல்குவை. 4 நிலத்தின் கீழ்பல் லுலோகங்கள் ஆயினை,நீரின் கீழெண் ணிலாநிதி வைத்தனை;தலத்தின் மீது மலையும் நதிகளும்,சாருங் காடுஞ் சுனைகளும் ஆயினை;குலத்தி லெண்ணற்ற பூண்டு பயிரினம்கூட்டி வைத்துப் பலநலந் துய்த்தனை;புலத்தை யிட்டிங் குயிர்கள் செய்தாய்,அன்னே!போற்றி!போற்றி!நினதருள் போற்றியே! 5 சித்த சாகரஞ் செய்தனை ஆங்கதிற்செய்த கர்மப் பயனெனப் பல்கினை;தத்துகின்ற திரையுஞ் சுழிகளும்தாக்கி யெற்றிடுங் காற்றுமுள் ளோட்டமுஞ்சுத்த மோனப் பகுதியும் வெண்பனிசூழ்ந்த பாகமும் சுட்டவெந் நீருமென்றுஒத்த நீக்கடல் போலப் பலவகைஉள்ள மென்னுங்க கடலில் அமைந்தனை. 6 35. ஊழிக் கூத்து வெடிபடு மண்டத் திடிபல தாளம் போட-வெறும்வெளியி லிரத்தக் கயொடு பூதம் பாட-பாட்டின்அடிபடு பொருளின் அடிபடு மொலியிற் கூடக்-களித்தாடுங் காளீ!சாமுண் டீ!கங் காளீ!அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னை. 1 ஐந்துறு பூதம் சிந்திப் போயொன் றாகப்-பின்னர்அதுவும் சக்திக் கதியில் மூழ்கிப் போக-அங்கேமுந்துறும் ஒளியிற் சிந்தை நழுவும் வேகத்-தோடேமுடியா நடனம் புரிவாய,அடு தீ சொரிவாய்!அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னை. 2 பாழாம் வெளியும் பதறிப் போய்மெய் குலையச்-சலனம்பயிலும் சக்திக் குலமும் வழிகள் கலைய-அங்கேஊழாம் பேய்தான்"ஓஹோ ஹோ"வென் றலைய;-வெறித்துறுமித் திரிவாய்,செருவெங் கூத்தே புரிவாய்!அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னை. 3 சத்திப் பேய்தான் தலையொடு தலைகள் முட்டிச்-சட்டச்சடசட சட்டெனுடைபடு தாளங்கொட்டி-அங்கேஎத்திக் கினிலும் நின்விழி யனல் போய் எட்டித்-தானேஎரியுங் கோலங் கண்டே சாகும் காலம்.அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னை. 4 காலத் தொடுநிர் மூலம் படுமூ வுலகும்-அங்கேகடவுள் மோனத் தொளியே தனியா யிலகும்-சிவன்கோலங் கண்டுன் கனல்செய் சினமும் விலகும்-கையைக்கொஞ்சித் தொடுவாய் ஆனந்தக்கூத் திடுவாய்!அன்னை!அன்னை!ஆடுங் கூத்தைநாடச் செய்தாய் என்னை. 5 36. காளிக்குச் சமர்ப்பணம் இந்த மெய்யும் கரணமும் பொறியும்இருபத் தேழு வருடங்கள் காத்தனன்;வந்த னம்;அடி பேரருள் அன்னாய்!வைர வீ! திறற் சாமுண்டி! காளி!சிந்த னைதெளிந் தேனினி யுன்தன்திரு வருட்கென அர்ப்பணஞ் செய்தேன்;வந்தி ருந்து பலபய னாகும்வகைதெ ரிந்துகொள் வாழி யடி!நீ. 37. காளி தருவாள் எண்ணி லாத பொருட்குவை தானும்,ஏற்றமும், புவி யாட்சியும் ஆங்கேவிண்ணில் ஆதவன் நேர்ந்திடும் ஒளிம்வெம்மை யும்பெருந் திணமையும் அறிவும்,தண்ணி லாவின் அமைதியும் அருளும்தருவள் இன்றென தன்னை யென்காளி;மண்ணி லார்க்குந் துயரின்றிச் செய்வேன்,வறுமை யென்பதை மண்மிசை மாய்ப்பேன். 1 தானம் வேள்வி தவங்கல்வி யாவும்தரணி மீதில் நிலைபெறச் செய்வேன்,வானம் மூன்று மழைதரச் செய்வேன்மாறி லாத வளங்கள் கொடுப்பேன்;மானம் வீரியம் ஆண்மை நன்னேர்மைவண்மை யாவும் வழங்கறச் செய்வேன்,நான்வி ரும்பின காளி தருவாள். 2 38. மஹா காளியின் புகழ் காவடிச் சிந்து ராகம்-ஆனந்த பைரவி தாளம்-ஆதி காலமாம் வனத்திலண்டக் கோலமா மரத்தின்மீதுகாளிசக்தி யென்றபெயர் கொண்டு-ரீங்காரமிட் டுலவுமொரு வண்டு-தழல்தாலும்விழி நீலவன்ன மூலஅத்து வாக்களெனும்கால்களா றுடையதெனக் கண்டு-மறைகாணுமுனி வோருரைத்தார் பண்டு.மேலுமாகிக் கீழுமாகி வேறுள திசையுமாகிவிணணுமண்ணு மானசக்தி வெள்ளம்-இந்தவிந்தையெல்லா மாங்கதுசெய் கள்ளம்-பழவேதமா யதன்முனுள்ள நாதமாய் விளங்குமிந்தவீரசக்தி வெள்ளம்விழும் பள்ளம்-ஆகவேண்டும் நித்த மென்தனேழை யுள்ளம் 1 அன்புவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்ஆக்கநீக்கம் யாவுமவள் செய்கை-இதைஆர்ந்துணர்ந்த வர்களுக்குண் டுய்கை-அவள்ஆதியா யநாதியா யகண்டவறி வாவளுன்தன்அறவுமவவள் மேனியிலோர் சைகை-அவள்ஆனந்தத்தி னெல்லை யற்ற பொய்கை.இன்பவடி வாகிநிற்பள் துன்பெலா மவளிழைப்பள்இஃதெலா மவள்புரியம் மாயை-அவள்ஏதுமற்ற மெய்ப பொருளின் சாயை-எனில்எண்ணியேஓம் சக்தியெனும் புண்ணிய முனிவர்நித்தம்எய்துவார்மெய்ஞ் ஞானமெனும் தீயை-எரித்தஎற்றுவாரிந் நானெ னும்பொய்ப் பேயை. 2 ஆதியாஞ் சிவனுமவன் சோதியான சக்தியுந்தான்அங்குமிங்கு மெங்குமுள வாகும்-ஒன்றேயாகினா லுலகனைத்தும் சாகும்-அவையன்றியோர் பொருளுமில்லை அன்றியொன்று மில்லைஆய்ந்திடில் துயரமெல்லாம் போகும்-இந்தஅறிவுதான் பரமஞான மாகும்.நீதியா மரசுசெய்வர் நிதிகள்பல கோடிதுய்ப்பர்நீண்டகாலம் வாழ்வர்தரை மீது-எந்தநெறியுமெய்து வர்நினைத்தபோது-அந்தநித்தமுத்த சுத்தபுத்த சத்தபெருங் காளிபதநீழலடைந் தார்க்கில்லையோர் தீது-என்றும்நேர்மைவேதம் சொல்லும்வழி யீது. 3 39. வெற்றி எடுத்த காரியம் யாவினும் வெற்றி,எங்கு நோக்கினும் வெற்றிமற் றாங்கேவிடுத்த வாய்மொழிக் கெங்கணும் வெற்றி,வேண்டி னேனுக் கருளினள் காளி;தடுத்து நிற்பது தெய்வத மேனும்சாகு மானுட மாயினும் அஃதைப்படுத்து மாய்பபள் அரட்பெருங் காளி,பாரில் வெற்ற எனக்குறு மாறே. 1 எண்ணு மெண்ணங்கள் யாவினும் வெற்றி,எங்கும் வெற்றி, எதனிலும் வெற்றி,கண்ணு மாயிரு ரும்மென நின்றாள்காளத் தாயிங் கெனக்கருள் செய்தாள்;மண்ணும் காற்றும் புனலும் அனலும்வானும் வந்து வணங்கிநில் லாவோ?விண்ணு ளோர்பணிந் தேவல்செய் யாரோ?வெல்க காளி பதங்களென் பார்க்கே. 2 40. முத்துமாரி உலகத்து நாயகியே!-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!உன் பாதம் சரண்பகுந்தோம்,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!கலகத் தரக்கர்பலர்,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!கருத்தி னுற்றே புகுந்துவிட்டார்,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி! பலகற்றும் பலகேட்டும்-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!பய னொன்று மில்லையடி-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!நிலையெங்கும் காணவில்லை,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!நின்பாதம் சரண் புகுந்தோம்,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி! 1 துணிவெளுக்க மண்ணுண்டு,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!தோல்வெளுக்கச் சாம்பருண்டு,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!மணி வெளுடக்கச் சாணையுண்டு,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!மனம்வெளுக்க வழியில்லை,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி! பிணிகளுக்கு மாற்றுண்டு,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!பேதைமைக்கு மாற்றில்லை,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!அணிகளுகொ ரெல்லையில்லாய்,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி!அடைக்கலமிங் குனைப்புகுந்தோம்,-எங்கள் முத்துமாரியம்மா, எங்கள் முத்து மாரி! 2 41. தேச முத்துமாரி தேடியுனைச் சரணடைந்தேன்,தேச முத்து மாரி!கேடதனை நீக்கிடுவாய், கேட்டவரந் தருவாய் பாடியுனைச் சரணடைந்தேன் பாசமெல்லாங் களைவாய்;கோடிநலஞ் செய்திடுவாய்,குறைகளெல்லாந் தீர்ப்பாய் எப்பொழுதும் கவலையிலே இணங்கி நிற்பான் பாவி;ஒப்பியுன தேவல்செய்வேன் உனதருளால் வாழ்வேன் சக்தி யென்று நேர மெல்லாந் தமிழ்க் கவிதை பாடி,பக்தியுடன் போற்றி நின்றால் பயமனைத்துந் தீரும் ஆதாரம் சக்தி யென்றே அருமறைகள் கூறும்;யாதானுந் தொழில் புரிவோம்;யாதுமவள் தொரிலாம் துன்பமே இயற்கையெனும் சொல்லைமறந் திடுவோம்;இன்பமே வேண்டி நிற்போம்;யாவுமவள் தருவாள் நம்பினார் கெடுவ தில்லை;நான்கு மறைத் தீர்ப்பு;அம்பி கையைச் சரண் புகுந்தால் அதிகவரம் பெறலாம். 42. கோமதி மஹிமை தாருக வனத்தினிலே-சிவன்சரணநன் மலரிடை யுளம்பதித்துச்சீருறத் தவம் புரிவார்-பரசிவன்பு கழமுதினை அருந்திடுவார்;பேருயர் முனிவர் முன்னே-கல்விப்பெருங்கடல் பருகிய சூதனென்பான்தேருமெய்ஞ் ஞனத்தினால்-உயர்சிவனிகர் முனிவரன் செப்புகின்றான். 1 வாழிய முனிவர்களே!-புகழ்வளர்ந்திடுஞ் சங்கரன் கோயிலிலே,உழியைச் சமைத்த பிரான்;-இந்தஉலக மெலாமுருக் கொண்டபிரான்,ஏழிரு புவன்ததிலும்-என்றும்இயல்பெரும் உயிகளுக் குயிராவான,ஆழுநல் லறிவாவான்,-ஒளியறிவிக் கடந்தமெய்ப் பொருளாவான். 2 தேவர்க் கெலாந்தேவன்;-உயர்சிவபெரு மான்பண்டொர் காலத்திலேகாவலி னுலகளிக்கும்-அந்தக்கண்ணனுந் தானுமிங் கோருருவாய்,ஆவசெல டருந்தவங்கள்-பலஆற்றிய நாகர்கள் இருவர் முன்னேமேவிநின் றருள்புரிந்தான்,-அந்தவியப்புறு சரிதையை விளம்புகின்றேன். 3 கேளீர்,முனிவர்ளே!-இந்தக்கீர்த்திகொள் சரிதையைக் கேட்டவர்க்கேவேள்விகள் கோடி செய்தால்-சதுர்வேதங்க ளாயிரமுறை படித்தால்,மூளுநற் புண்ணியந்தான்-வந்துமொய்த்திடும்;சிவனியல் விளங்கிநிற்கும்;நாளுநற் செல்வங்கள்-பலநணுகிடும்;சரதமெய் வாழ்வுண்டாம். 4 இக்கதை உரைத்திடுவேன்,-உளம்இன்புறக் கேட்பீர்,முனிவர்களே!நக்க பிரினருளால்-இங்குநடைபெறு முலகங்கள் கணக்கிலவாம்!தொக்கன அண்டங்க்ள்-வளர்தொகைபல கோடிபல் கோடிகளாம்!இக்கணக் கெவர றிவார்?-புவிஎத்தனை யுளதென்ப தியார றிவார்? 5 நக்க பிரான றிவான்;-மற்றுநானறி யேன்பிற நரரறியார்;தொக்க பேரண்டங்கள்-கொண்டதொகைக்கெல்லை யில்லையென்று சொல்லுகின்றதக்கபல் சாத்திரங்கள்;ஒளிதருகின்ற வானமொர் கடல்போலாம்;அக்கடலதனுக்கே-எங்கும்அக்கரை யிக்கரை யொன்றில்லையாம். 6 இக்கட லதனக்தே-அங்கங்கிடையிடைத் தான்றும்புன் குமிழிகள்போல்தொக்கன உலகங்கள்-திசைத்தூவெளி யதனிடை விரைந்தோடம்மிக்கதொர் வியப்புடைத்தாம்-இந்தவியன்பெரு வையத்தின் காட்சி,கண்டீர்மெய்ககலை முனிவர்களே!-இதன்மெய்ப்பொருள் பரசிவன்சக்தி,கண்டீர்! எல்லை யுண்டோ இலையோ?-இங்குயாவர் கண்டார்திசை வெளியினக்கே?சொல்லுமொர் வரம்பிட்டால்-அதை***(இது முற்றுப் பெறவில்லை) 43. சாகா வரம் பல்லவிசாகாவர மருள்வாய், ராமா!சதுர்மறை நாதா!-சரோஜ பாதா! சரணங்கள்ஆகாசந் தீகால் நீர்மண்அத்தனை தமும் ஒத்து நிறைந்தாய்ஏகாமிர்த மாகிய நித்ள்இணைசர ணென்றால் இதுமுடி யாதா? (சாகா) வாகார்தோள் வீரா, தீரா,மன்மத ரூபா, வானவர் பூபா,பாகார்மொழி சீதையுன் மென்தோள்பழகிய மார்பா! பதமலர் சார்பா! (சாகா) நித்யா,நிர்மலா,ராமாநிஷ்க ளங்கா, சர்வா தாரா,சத்யா, சநாதநா,ராமா,சரணம்,சரணம்,சரண முதாரா! (சாகா) 44. கோவிந்தன் பாட்டு கண்ணி ரண்டும் இமையாமல் செந்நிறத்துமெல்லிதழ்ப்பூங் கமலத் தெய்வப்பெண்ணிரண்டு விழிகளைஹயம் நோக்கிடுவாய்கோவிந்தா! பேணி னோர்க்குநண்ணிரண்டு பொற்பாத மளித்தருள்வாய்சராசரத்து நாதா! நாளும்எண்ணிரண்டு கோடியினும் மிப்பலவாம்வீண்கவலை எளிய னேற்கே. 1 எளியனேன் யானெனலை எப்போதுபோக்டுவாய்,இறைவ னே!இவ்வளியிலே பறவையிலே மரத்தினிலேமுகிலினிலே வரம்பில் வானசெளியிலே கடலிடையே மண்ணகத்தேவீதியிலே வீட்டி லெல்லாம்களியிலே, கோவிந்தா!நினைக்கண்டுநின்னொடுநான் கலப்ப தென்றோ? 2 என்கண்ணை மறதுனிரு கண்களையேஎன்னகத்தில் இசைத்துக்கொண்டுநின்கண்ணாற் புவியெல்லாம் நீயெனவேநான்கண்டு நிறைவு கொண்டுஎவனகண்மை மறதியுடன் சோம்பர்முதற்பாவமெலாம் மடிந்து,நெஞ்சிற்புன்கண்போய் வாழ்ந்திடவே, கோவிந்தா!என்க்கமுதம் புகட்டு வாயே. 3 45. கண்ணனை வேண்டுதல் வேத வானில் விளங்கி"அறஞ்செய்மின்,சாதல் நேரினுஞ் சத்தியம் பூணுமின்,தீத கற்றுமின்"என்று திசையெல்லாம்மோத நித்தம் இடித்து முழுங்கியே. 1 உண்ணுஞ் சாதிக் குறக்கமும் சாவுமேநண்ணு றாவணம் நன்கு புரந்திடும்எண்ண ரும்புகழ்க் கீதையெனச் சொலும்பண்ண மிழ்தத் தருள்மழை பாலித்தே, 2 எங்க ளாரிய பூமி யெனும்பயிர்மக்க ளம்பெற நித்தலும் வாழ்விக்கும்துங்க முற்ற துணைமுகி லே! மலர்ச்செங்க ணாய்நின் பதமலர் சிந்திப்பாம் 3 வீரர் தெவ்தம் கர்ம விளக்குநற்பார தர்செய் தவத்தின் பயனெ னும்தார விர்ந்த தடம்புயக் பாத்தனோர்கார ணம்மெனக் கொண்டு கடவுள்நீ. 4 நின்னை நம்பி நிலத்திடை யென்றுமேமன்னு பாரத மாண்குலம் யாவிற்கும்உன்னுங் காலை உயர்துணை யாகவேசொன்ன சொல்லை யுயிரிடைச் சூடுவோம். 5 ஐய கேளினி யோர்சொல் அடியர்யாம்உய்ய நின்மொழி பற்றி யோழுகியமைய றும்புகழ் வாழ்க்கை பெறற்கெனச்செய்யும் செய்கையி னின்னருள் சேர்பையால். 6 ஒப்பி லாத உயர்வொடு கல்வியும்எய்ப்பில் வீரமும் இப்புவி யாட்சியும்தப்பி லாத தருமமுங் கொண்டுயாம்அப்ப னேநின் னடிபணிந் துய்வமால். 7 மற்று நீயிந்த வாழ்பு மறுப்பையேல்சற்று நேரத்துள் எம்முயிர் சாய்த்தருள்கொற்ற வா!நின் குவலய மீதினில்வெற்று வாழ்க்கை விரும்பி யழிகிலேம். 8 நின்தன் மாமர பில்வந்து நீசராய்ப்பொன்றல் வேண்டிலம் பொற்கழ லாணைகாண்இன்றிங் கெம்மை யதம்புரி, இல்லையேல்வென்றி யும்புக ழுந்தரல் வேண்டுமே. 9 46. வருவாய் கண்ணா! பல்லவிவருவாய் வருவாய் வருவாய்-கண்ணா!வருவாய் வருவாய் வருவாய்! சரணங்கள்உருவாய் அறிவில் ஒளிர்வாய்-கண்ணா!உயிரின் னமுதாய்ப் பொழிவாய்-கண்ணா!கருவாய் என்னுள் வளர்வாய்-கண்ணா!கமலத் திருவோ டிணைவாய்-கண்ணா! (வருவாய்) இணைவாய் எனதா வியிலே-கண்ணா!இதயத் ரிதனிலே யமர்வாய்-கண்ணா!கணைவா யசரர் தலைகள்-சிதறக்கடையூ ரியிலே படையோ டெழுவாய்! (வருவாய்) எழுவாய் கடல்மீ தினிலே-எழுமோர்இரவிக் கணையா உளமீ தினிலேதொழுவேன் சிவனாம் நினையே-கண்ணா!துணையே அமரர் தொழும் வானவனே! (வருவாய்) 47. கண்ண பெருமானே! காயிலே புளிப்பதென்னே கண்ண பெருமானே!-நீகனியிலே இனிப்பதென்னே? கண்ண பெருமானே!நோயிலே படுப்பதென்னே? கண்ண பெருமானே!-நீநோன்பிலே உயிர்ப்பதென்னே?கண்ண பெருமானே! காற்றிலே குளிர்ந்ததென்னே?கண்ண பெருமானே!-நீகனலிலே சுடுவதென்னே? கண்ண பெருமானே!சேற்றிலே குழம்பலென்னே? கண்ண பெருமானே!திக்கிலே தெளிந்ததென்னே? கண்ண பெருமானே! ஏறிறிநின்னைத் தொழுவதென்னே? கண்ண பெருமானே!நீஎளியர்தம்மைக் காப்பதென்னே? கண்ண பெருமானே!போற்றினோரைக் காப்பதென்னே!கண்ண பெருமானே!நீபொய்யர் தம்மை மாய்ப்பதென்னே?கண்ண பெருமானே! வேறுபோற்றி!போற்றி!போற்றி!போற்றி!கண்ண பெருமானே!-நீபொன்னடி போற்றி நின்றேன்கண்ண பெருமானே! 48. நந்த லாலா ராகம்-யதுகுல காம்போதி தாளம்-ஆதி காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்கரியநிறந் தோன்று தையே நந்த லாலா! பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா! கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்கீத மிசக்குதடா நந்த லாலா! தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா! 49. கண்ணன் பிறப்பு கண்ணன் பிறந்தான்-எங்கள்கண்ணன் பிறந்தான்-இந்தக்காற்றதை யெட்டுத் திசையிலுங் கூறிடும். தின்ன முடையான்-மணிவண்ண முடையான்-உயர்தேவர் தலைவன் புவிமிசைத் தோன்றினன் பண்ணை யிசைப்பீர்-நெஞ்சிற்புண்ணை யொரிப்பீர்-இந்தப்பாரினிலே துயர் நீங்கிடும் என்றிதை எண்ணிடைக் கொள்வீர்-நன்குகண்ணை விழிப்பீர்-இனிஏதுங் குறைவில்லை;வேதம் துணையுண்டு, (கண்ணன்) அக்கினி வந்தான்-அவன்திக்கை வளைத்தான்-புவியாரிருட் பொய்மைக் கலியை மடித்தனன் துக்கங் கெடுத்தான்-சுரர்ஒக்கலும் வந்தார்-சுடர்ச்சூரியன்,இந்திரன்,வாயு,மருத்துக்கள் மிக்க திரளாய்-சுரர்இக்கணந் தன்னில்-இங்குமேவி நிறைந்தனர்;பாவி யசுரர்கள் பொக்கென வீழ்ந்தார்,-உயிர்கக்கி முடிந்தார்-கடல்போல ஒலிக்குது வேதம் புவிமிசை. (கண்ணன்) சங்கரன் வந்தான்-இங்குமங்கல மென்றான்-நல்லசந்திரன் வந்தின் னமுதைப் பொழிந்தனன் பங்க மொன் றில்லை-ஒளிமங்குவ தில்லை-இந்தப்பாரின்கண் முன்பு வானத்திலே நின்று கங்கையும் வந்தாள்-கலைமங்கையும் வந்தாள்-இன்பக்காளி பராசக்தி அன்புட னெய்தினள் செங்கம லத்தாள்-எழில்பொங்கு முகத்தாள்-திருத்தேவியும் வந்து சிறப்புற நின்றனள். (கண்ணன்) 50. கண்ணன் திருவடி கண்ணன் திருவடி, எண்ணுக மனமேதிண்ணம் அழியா, வண்ணந் தருமே, தருமே நிதியும்,பெருமை புகழும்கருமா மேனிப்,பெருமா னிங்கே, இங்கே யமரர்,சங்கந் தோன்றும்மங்கும் தீமை,பொங்கும் நலமே. நலமே நாடிற்,புலவீர் பாடீர்;நிலமா மகளின்,தலைவன் புகழே. புகழ்வீர் கண்ணன்,தகைசே ரமரர்தொகையோ யசருப்,பகைதீர்ப் பதையே தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியைஆர்பபா ரமரர்,பார்ப்பார் தவமே. தவறா துணர்வீர்,புவியீர் மாலும்சிவனும் வானோர்,எவரும் ஒன்றே ஒன்றே பலவாய், நின்றோர் சக்திஎன்றுந் திகழும், குன்றா வொளியே