உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறுவாலையில் சோமவார பூஜை

சிறுவாலையில் சோமவார பூஜை

 கண்டாச்சிபுரம்: சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில் சோமவார பூஜைகள் நடந்தது. கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், நேற்று முற்பகல் 11:00 மணிக்கு 1008 லலிதா சகஸ்ரநாமம் பூஜை நடந்தது. அதனைத் தொடர்ந்து நடந்த உச்சிகால பூஜையில், பக்தர்கள் பங்குபெற்ற வாழைப்பூ கலச வழிபாடு மற்றும் மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாரதனைகள் நடந்தது. பின்னர், பக்தர்களுக்கு நன்னீர் தீர்த்தப் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சிறுவாலை, கெடார், சூரப்பட்டு, விழுப்புரம் ஆகிய பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், சிவாச்சாரியார் கோபி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !