காளியம்மன் கோயிலில் பூத்த மலர் பூ அலங்காரத்தேர்
ADDED :2643 days ago
திண்டுக்கல், திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோயில் தெருவில் உள்ள காளியம்மன் கோயிலில் 23ம் ஆண்டு பூத்தமலர் பூச்சொரிதல் விழா நடந்தது. கோட்டைகுளத்தில் நேற்று பால் குடம் அலங்கரித்து ஊர்வலம் வந்தது. பூத்தமலர் பூத்தேரில் அம்மன் எழுந்தருளி மேள வாத்தியங்கள் முழங்க வாண வேடிக்கை நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.