ஜோதி தரிசனம்: திரளானோர் பங்கேற்பு
ADDED :2630 days ago
தலைவாசல்: தலைவாசலில், வடகுமரை, இலுப்பநத்தம், வீரகனூரில், வள்ளலார் சத்திய ஞான சபை உள்ளது. பூச நட்சத்திரத்தை முன்னிட்டு, அங்கு, நேற்று காலை, சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு, தீபாராதனை, அகவல் பாராயணம் நடந்தது. இரவு, ஏழு திரைகள் விலக்கி, ஜோதி தரிசனம் நடந்தது. ஏராளமான பக்தர்கள், அருட்பெருஞ்ஜோதி கோஷம் எழுப்பி தரிசனம் செய்தனர்.