மேலூர் கஸ்தூரிபாய் நகர் மகர்நம் பொட்டலில் வதம் செய்த அம்மன்
ADDED :2804 days ago
மேலூர்: மேலூர் கஸ்தூரிபாய் நகர் மகர்நம் பொட்டலில் அசுரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. நவராத்திரி விழாவில் பத்தாம் நாளான நேற்று 19 ல் அசுரனை அழிக்க மேலூர் சிவன் கோயிலில் இருந்து காமாட்சி அம்மன் குதிரை வாகனத்தில் வந்தார். ஏற்பாடுகளை சிவாச் சாரியார் தட்சிணாமூர்த்தி, நிர்வாக அதிகாரி பாலசரவணன் செய்திருந்தனர்.