வாழ்வில் நிம்மதி பெற ஸ்வாமிகள் வகுத்து அளித்திருக்கும் வழி
ADDED :2549 days ago
வாழ்வில் நிம்மதி பெற ஸ்வாமிகள், மஹான் ஸத்குரு ஸ்வாமிகளின் உபதேசத்தின்படி வகுத்து அளித்திருக்கும் வழி
1. உதயத்திற்கு முன் ஸ்வதர்மம் (ஸ்நானம் ஸந்த்யாவந்தனம்) செய்ய
வேண்டும்
2. உதயத்திலிருந்து 4 மணி நேரம் 48 நிமிஷம் ராம நாம ஜெபம் (ஒரு லக்ஷம்)
3. உஞ்சவ்ருத்தி (தற்காலத்தில் தேவையில்லை)
4. மத்யான வேளை ஸ்வதர்ம அனுஷ்டானம். பிறகு ஆகாரம், பிறகு அஸ்தமனம் வரை ஸ்ரீமத் பாகவதம் படிப்பது.
5. அஸ்தமான சமயம் ஸ்வதர்மானுஷ்டானம்
6. பிறகு தோடயமங்கலம் முதல் திவ்ய நாமம் உள்பட இரண்டு மணி நேரம் பஜனை.
7. இரவு போஜனம் பிறகு நாம மஹிமையை ஒருவருக்காவது சொல்லிவிட்டு சயனம்
கூட்டம் சேர்க்காமல் தான் மட்டும் மேலே குறித்தபடி செய்தால் மனது நிச்சயம் நிம்மதி அடையும். ஜன்ம லாபம் ஏற்படும்.