உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில், சஷ்டி விரதம் துவக்கம்

உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில், சஷ்டி விரதம் துவக்கம்

உடுமலை:உடுமலை, சுற்றுப்பகுதி கோவில்களில், கந்த சஷ்டி விழாவையொட்டி, நேற்று 8ம் தேதி, காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.

பிரசன்ன விநாயகர் கோவில், மடத்துக்குளம், ஞானதண்டாயுதபாணி சுவாமி கோவிலில், காலை, 10:00 மணிக்கு கந்த சஷ்டி விழா காப்பு கட்டும் விழா நடந்தது. தொடர்ந்து, 14ம் தேதி சூரசம்ஹாரம் வரை, நாள்தோறும், கோவில்களில், சிறப்பு அபிஷேக அலங்காரம் மற்றும் திருவீதி உலா நடக்கிறது. நேற்று (நவம்., 8ல்) காப்பு கட்டி, பக்தர்கள் விரதத்தை துவக்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !