உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஏகாம்பரநாதர் கோவிலில் விளக்கு மாடம் தேவை

ஏகாம்பரநாதர் கோவிலில் விளக்கு மாடம் தேவை

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், அகல் விளக்கு தீபம் ஏற்றுவதற்கு என, பாதுகாப்பு அம்சங்களுடன், விளக்கு மாடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.மதுரை மீனாட்சியம்மன் கோவில் வளாகத்தில், கடந்த பிப்., 2ல் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும், தீ தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.இதையடுத்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பரிகாரத்திற்காக தீபம் ஏற்ற வரும் பக்தர்கள், அவர்கள் கைகளால் தனித்தனியாக தீபம் ஏற்ற வேண்டும் என, நினைக்கின்றனர்.இதனால், கோவில் கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம், தரைப்பகுதியில், ஆங்காங்கே தீபம் ஏற்றி வழிபாடு செய்கின்றனர். இதனால், தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, கொடிமரம் அருகில், பாதுகாப்பு அம்சங்களுடன் விளக்கு மாடம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !