உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தும்பைப்பட்டி சங்கரநாராயணர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

தும்பைப்பட்டி சங்கரநாராயணர் கோவிலில் பிரதோஷ வழிபாடு

மதுரை: மதுரை மாவட்டம்,  மேலூர் தாலுகா,  தும்பைப்பட்டி,  சிவாலயபுரம், சங்கர லிங்கம் சுவாமி,  கோமதி அம்மன், சங்கரநாராயணர் கோவிலில் நேற்று, தை முதல் வெள்ளிக் கிழமை வளர்பிறை பிரதோஷ வழிபாடு மற்றும் சிறப்பு  அர்ச்சனை, அலங்கார வழிபாடு நடைபெற்றது.  

முன்னதாக நந்தியம் பெருமாளுக்கு மஞ்சள்,  திருமஞ்சனம், மாவு, பால், தயிர், பன்னீர், இளநீர்,  கரும்பு சாறு, பஞ்சாமிர்தம்,  திருநீறு,  ஸ்வர்ணம்,  மற்றும் சந்தனப்பொடி ஆகிய அபிக்ஷேகம் நடைபெற்றது.   நாட்டின் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றத.  ஏராளமான பக்தர்கள்  கலந்து கொண்டனர்.  பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் பிரசாதம் வழங்கப்பட்டது. ரமேஷ் அய்யர் , சங்கர நாராயணர் கோவில் கல்வி, அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் விழாவை சிறப்பாக செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !