கொடுமுடி, புது மாரியம்மன் கோவில் பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன்
ADDED :2493 days ago
கொடுமுடி: கொடுமுடி, புது மாரியம்மன் கோவில் பொங்கல் விழாவையொட்டி, நேற்று (பிப்., 5ல்) மாலை, அக்னி குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி நடந்தது.
ஏராளமான பக்தர்கள், குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று (பிப்., 6ல்) பொங்கல் வைத்தலும், மகா பூஜை நடக்கிறது. நாளை (பிப்., 7ல்) பால்குட தீர்த்தம், கம்பம் காவிரியில் விடுதல் நிகழ்ச்சியும், இரவு பிரம்மாண்ட வானவேடிக்கை நிகழ்ச்சியும் நடக்க உள்ளது.