உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடவுள் தண்டிப்பதில்லை

கடவுள் தண்டிப்பதில்லை

* கடவுள் யாரையும் தண்டிக்க மாட்டார். ஏனெனில் அவர் அன்பானவர்.
* குறிக்கோள் இல்லாத வாழ்வு பரிதாபமானது.  மனிதன் ஏதாவது ஒரு பயனுள்ள குறிக்கோளுடன் வாழ வேண்டும்.      
* குறிக்கோளின் தன்மையைப் பொறுத்து வாழ்க்கை முறையை மாற்றி அமைப்பது அவசியம்.      
* தியானம் செய்வதை அன்றாட கடமையாக்கிக் கொள். தெய்வீக சக்தியை எளிதாக அடைய முடியும்.       
* ஆன்மிகம் என்பது வாழ்வைத் துறப்பது அல்ல. வாழ்வை முழுமையாக்கும் முயற்சி.
* உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் நம்பிக்கை பரவட்டும். செயலில் ஈடுபட்டு சாதனை படைப்பாய்.
* ஒருபோதும் உணர்ச்சி வசப்படாதே. பொறுமை இழப்பதோடு முடிவு எடுக்க முடியாமல் தடுமாற நேரிடும்.            
* பிறர் உன்னை பாராட்ட வேண்டும் என எதிர்பார்க்காதே. நல்லதை பாராட்ட யாருக்கும் மனமில்லை.           
* ஆன்மிகம் ஒன்றே மேலான உதவி. மற்றதெல்லாம் வெறும் கற்பனையே.
* எப்போதும் அமைதியாக இரு. பேசாமல் இருக்க பழகினால் பிரச்னை வருவதில்லை.
நிறுவுகிறார் ஸ்ரீஅன்னை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !