காஞ்சிபுரம் அமரேஸ்வரருக்கு 20ல் திருக்கல்யாணம்
ADDED :2713 days ago
காஞ்சிபுரம்:பெரிய காஞ்சிபுரம் அமரேஸ்வரர் கோவிலில், பங்குனி உத்தர திருக்கல்யாண விழா, 20ல், நடைபெறுகிறது.காஞ்சிபுரம், நிமந்தகார ஒத்தவாடை தெருவில், அபிராமசுந்தரி உடனாகிய அமரேஸ்வரர் எனப்படும் திரிபுராந்தகேஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும், பங்குனி உத்தர திருக்கல்யாண வைபவம் நடைபெறும்.அதன்படி, இந்தாண்டு திருக்கல்யாண வைபவம், வரும், 20ம் தேதி, மாலை, 6:30 மணிக்கு நடைபெறுகிறது.