மதுரை, தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா
ADDED :2397 days ago
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதி வளாகத்தில் மின்அலங்கார வாகனத்தில் அம்மன் அருள்பாலித்தார்.
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. நேற்று மாலை 6:00 மணிக்கு மின் அலங்காரம் செய்யப்பட்ட பூப்பல்லக்கில் மாரியம்மன் எழுந்தருளி மீனாட்சி அம்மன் கோயில் அம்மன் சன்னதி, கிழக்கு வாயிலில் இருந்து புறப்பாடாகி அம்மன் சன்னதி, நான்கு மாசி வீதிகள், யானைக்கல், வடக்கு, கீழவெளி வீதி, காமராஜர் சாலை வழியாக கோயில் வந்தடைந்தார். அங்கு மாரியம்மனுக்கு பூச்சொரிதல், தீபாராதனை சிறப்பாக நடைபெற்றது. ஏற்பாடுகளை தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் நடராஜன் செய்திருந்தனர்.