அநீதியை தட்டிக் கேட்கும் அம்மன்
                              ADDED :2407 days ago 
                            
                          
                           பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ., தொலைவிலுள்ள தலம் ஆனைமலை.  இங்கு, மாசாணியம்மன் அநீதியை தட்டிக் கேட்கும் நீதிதெய்வமாக இருக்கிறார். இவரை செவ்வாய், வெள்ளி, அமாவாசையன்று வழிபடுவது நல்லது. 
● அநியாயம், நம்பிக்கை துரோகம், திருட்டு, ஏமாற்றுதல், எதிரி தொல்லை போன்ற பிரச்னைக்கு தீர்வு கிடைக்க இங்குள்ள  நீதிக்கல்லில் மிளகாய் அரைத்துப் பூசி பக்தர்கள் வழிபடுகின்றனர். நிவாரணம் கிடைத்ததும் அம்மனை குளிர்விக்க எண்ணெய்க்காப்பு வழிபாடு செய்வர்.  
●  மணவாழ்க்கை அமைய அம்மனுக்கு வேண்டிக்கொள்வர். திருமணம் முடிந்ததும் தம்பதியாக வந்து சேலை சாத்தி வழிபடுகின்றனர்.