உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை கொடியேற்றம்

திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை கொடியேற்றம்

திருவாடானை: திருவெற்றியூர் பாகம்பிரியாள் கோயிலில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நடந்தது.

திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது.சிவகங்கை தேவஸ்தானத்திற்கு சொந்தமான இக்கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம் நேற்று காலை 9:30 மணிக்கு நடந்தது. மணிகண்டன் குருக்கள் தலைமையில்சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க விழா துவங்கியது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். வல்மீகநாதர், பிரியாவிடையுடனும், பாகம்பிரியாள் தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தனர்.விழாவில் தேவஸ்தான கண்காணிப்பாளர் பரமேஸ்வர பாண்டியன், கவுரவ கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் மற்றும் கிராமத்தார்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஏப்.,14 ல் திருக்கல்யாணமும், 18 ல் தேரோட்டமும் மறுநாள் தீர்த்தவாரி நிகழ்ச்சியும் நடைபெறும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !