திருவள்ளூர் பைரவருக்கு சிறப்பு அபிஷேகம்
ADDED :2371 days ago
திருவள்ளூர்: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஒவ்வொரு மாதமும், தேய்பிறை அஷ்டமி தினத்தன்று, கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெறும். இம்மாதத்திற்கான, தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, திருவள்ளூர் தீர்த்தீஷ்வரர் கோவிலில், மாலை சிறப்பு அபிஷேகம் நடந்தது. பூங்கா நகர், சிவ - விஷ்ணு கோவிலில், பைரவருக்கு அபிஷேகம் மற்றும் ஆராதானை நடந்தது.