சிறுவாலையில் உச்சிகால பூஜை
ADDED :2326 days ago
கண்டாச்சிபுரம்: கெடார் அடுத்த சிறுவாலை பாலாம்பிகை உடனுறை பாலேஸ்வரர் கோவிலில், சோமவாரத்தையொட்டி நேற்று (ஜூன்., 10ல்) மதியம் உச்சிகால பூஜை நடந்தது.
அதனையொட்டி, பக்தர்கள் பங்குபெற்ற வாழைப்பூ கலச வழிபாடும், தொடர்ந்து மூலவர் பாலேஸ்வரர் மற்றும் பாலாம்பிகை அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.ஏற்பாடுகளை அறங்காவலர் சம்பத், சிவாச்சாரியார் கோபி ஆகியோர் செய்திருந்தனர்.