நாமக்கல் சாய் தபோவனத்தில் சிறப்பு ஆரத்தி
ADDED :2322 days ago
நாமக்கல்: தொட்டிப்பட்டி, சாய் தபோவனத்தில், ஷீரடி சாய்பாபாவுக்கு சிறப்பு ஆரத்தி நடந்தது. ஆனி மாதம் இரண்டாது வியாழனை முன்னிட்டு, நாமக்கல் அடுத்த தொட்டிப்பட்டி, ஷீரடி சாய்பாபா சாய் தபோவனத்தில், நேற்று (ஜூன்., 27ல்) சிறப்பு ஆரத்தி நடந்தது.
அதிகாலை, சாய்பாபாவிற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, காக்கட் எனும் ஆரத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. தொடர்ந்து பாபாவின் பஜனை நிகழ்ச்சி நடந்தது. பின்னர், மதியான் ஆரத்தி பாடப்பட்டு, வேதங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மாலை, 6:00 மணிக்கு சிறப்பு ஆரத்தி நடைபெற்றது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.