புரி கோவிலில் புகையிலைக்கு தடை
ADDED :2264 days ago
புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் புரியில், புகழ் பெற்ற ஜகன்னாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். வெற்றிலை, புகையிலை பொருட்களை பயன்படுத்தும் பக்தர்கள், எச்சிலை, கோவில் வளாகத்திலேயே துப்புகின்றனர். இதனால், கோவில் அசுத்தமாக காட்சியளிக்கிறது. இதையடுத்து, வெற்றிலை, புகையிலை பொருட்கள் பயன்படுத்தும் பக்தர்கள், கோவிலுக்குள் நுழைய தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது. மீறி நுழைந்து, கோவில் வளாகத்தில் அசுத்தப்படுத்தினால், அவர்களுக்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கவும், கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.