மாமல்லபுரத்தில் மூதாதையர் வழிபாடு
ADDED :2284 days ago
மாமல்லபுரம் : மாமல்லபுரம் பகுதியினர், ஆடி அமாவாசையில், மூதாதையரை வழிபட்டனர்.
இந்து மத பாரம்பரிய கலாசார நடைமுறைகளில், மஹாளய, ஆடி அமாவாசை நாட்களில், மூதாதையர், இப்பூவுலகிற்கு வந்து, சந்ததியினரை ஆசீர்வதிப்பதாக நம்பிக்கை.பிற நாட்களில், நாம், அவர்களை வழிபட தவறினாலும், இந்நாட்களில், வழிபட்டு, ஆசி பெறுவது சிறப்பு.ஆடி அமாவாசை நாளான நேற்று (ஜூலை., 31ல்), மாமல்லபுரத்தில், ஸ்தலசயன பெருமாள் கோவில் குளக்கரை மற்றும் கடற்கரையில், இப்பகுதியினர், பட்டாச்சாரியார் மந்திர முழக்கத்துடன், மூதாதையருக்கு, எள், பழம், தேங்காய், மலர் ஆகியவை படைத்து, வழிபட்டனர்.