சின்னாளபட்டியில் கருட பஞ்சமி
ADDED :2355 days ago
சின்னாளபட்டி:கருட பஞ்சமியை முன்னிட்டு சின்னாளபட்டி அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயி லில், சிறப்பு பூஜை நடந்தது. திரவிய அபிஷேகத்துடன், சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அஷ்டோத்திர பூஜை, மகா தீபாராதனை நடந்தது. செம்பட்டி கோதண்டராமர் கோயில், கன்னிவாடி கதிர் நரசிங்கபெருமாள் கோயிலில், கருடாழ்வாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை கள் நடந்தது.