சேஷ வாகனத்தில் வைகுண்ட நாதன் உலா
ADDED :2586 days ago
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவையொட்டி, பெருமாள் சஷே வாகனத்தில் வைகுண்ட நாதனாக பக்தர்களுக்கு எழுந்தருளினார். தொடர்ந்து பெருமாள் நேற்று இரவு கருட வாகனத்திலும், ஆக.11 அனுமன் வாகனத்திலும், தொடர்ந்து குதிரை வாகனத்தில் வீதிவலம் வருவார். ஆக., 15 ல் தேரோட்டம் நடக்கிறது.