உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தோஷம் போக்கும் பூஜை

தோஷம் போக்கும் பூஜை

கிருஷ்ண ஜெயந்தியன்று, குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில், வீட்டிலுள்ள பெண்கள் மாக்கோலம் இடுவர். பின், வாசல்,  பூஜையறை வரை கண்ணனின் பாதத்தை வரைவர்.  காலையில் பசுவுக்கு உணவளிப்பர். கண்ணனுக்கு விருப்பமான பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவல் படைப்பர். ’ஓம் நமோ பகவதே வாசுதேவாய’ என்னும் மந்திரத்தை 108 முறை ஜபித்து மலர்களை தூவி தீபாராதனை காட்டுவர்.  கண்ணன் பிறப்பை சொல்லும் ’தசம ஸ்கந்தம்’  என்னும் பகுதியை ஒருவர் படிக்க,  மற்றவர்கள் கேட்பது நல்லது. இதனால் புத்திரதோஷம் நீங்கும். அழகும், அறிவும் மிக்க குழந்தைகள்  பிறக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !