நடுவீரப்பட்டு சிவன் கோவில்களில் தேய்பிறை அஷ்டமி பூஜை
ADDED :2208 days ago
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு சி.என்.பாளையம் சிவன் கோவில்களில், தேய்பிறை அஷ்டமி பூஜை நேற்று முன்தினம் (செப்., 21ல்0 நடந்தது.
நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவில்,சி.என்.பாளையம் சொக்கநாதர் கோவில்,மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரர் கோவில் ஆகிய கோவில்களில், தேய்பிறை அஷ்டமி பூஜை நடந்தது. பூஜையை முன்னிட்டு நேற்று (செப்., 22ல்)இரவு 7:00 மணிக்கு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. 8:00 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது. பூஜையை முன்னிட்டு காலபைர வர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டு, காலபைரவரை வழிபட்டனர்.