உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குன்றத்தில் வேல் எடுக்கும் விழா: பால் அபிஷேகம் இல்லை

குன்றத்தில் வேல் எடுக்கும் விழா: பால் அபிஷேகம் இல்லை

திருப்பரங்குன்றம்: ‘திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மலைமேல் குமரருக்கு வேல் எடுக்கும் விழா நாளை (செப்., 27) நடப்பதையொட்டிமூலவர் கரத்திலுள்ள வேலுக்கு பால் அபிஷேகம் செய்யப்படாது.

மலையை குடைந்து மூலவர் வடிவமைக்கப்பட்டுள்ளதால் பக்தர்கள் கொண்டுவரும் பால், பன்னீர், விபூதி உள்ளிட்ட அபிஷேகங்கள் மூலவர் கரத்திலுள்ள தங்க வேலுக்கு மட்டுமே நடக்கும். நாளை காலை மலைமேல் வேல் கொண்டு செல்லப்பட்டு சுனை தீர்த்தத்தில் அபிஷேகம் நடக்கும். மீண்டும் இரவு மூலவர் கரத்தில் வேல் சேர்ப்பிக்கப்படும். அதனால் நாளை மட்டும்  பால் அபிஷேகம் நடக்காது. கோயில் நடை திறப்பு, பூஜைகள் வழக்கம் போல் நடக்கும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !