/
உலக தமிழர்
/
ஆஸ்திரேலியா
/
செய்திகள்
/
ஆக்லாந்தில் சீன தீபத்திருவிழா கண்காட்சி
/
ஆக்லாந்தில் சீன தீபத்திருவிழா கண்காட்சி
மார் 02, 2026

ஆக்லாந்தில் சீன தீபத்திருவிழா கண்காட்சி
சீனர்களின் புது வருடத்தை ஒட்டி ஆக்லாந்தில் உள்ள மனுக்காவில் சிட்டி சென்டர் மைதானத்தில் (லன்டர்ன் - Lantern) தீபத் திருவிழா கண்காட்சி கடந்த பிப்ரவரி 26,27,28 மற்றும் மார்ச் 1 ஆம் தேதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.நகரின் எல்லா பகுதிகளில் இருந்தும் பெற்றோர்கள் அவர்கள் குழங்கைளுடன் வந்திருந்து பலவித வடிவங்களில் கண் கவரும் கண்காட்சியை தீபத்திருவிழாவை கண்டு மகிழ்ந்தனர்.
தமிழ் நாட்டு கண்காட்சி போல ஒவ்வொரு நாளும் எல்லா விதமான ஏற்பாடும் செய்யப்பட்டு இருந்தது. வித விதமான உணவுகளும் விற்பனை செய்யப்பட்டது. ஒவ்வொரு நாளும் வான வேடிக்கை நடைபெற்றது. பல விதமான வண்ண விளக்குகள் விற்பனை செய்யப்பட்டது
Advertisement

