/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
இரண்டு ஆண்டு தவிப்புக்கு முற்றுப்புள்ளி: தாயகம் திரும்பும் தமிழர்
/
இரண்டு ஆண்டு தவிப்புக்கு முற்றுப்புள்ளி: தாயகம் திரும்பும் தமிழர்
இரண்டு ஆண்டு தவிப்புக்கு முற்றுப்புள்ளி: தாயகம் திரும்பும் தமிழர்
இரண்டு ஆண்டு தவிப்புக்கு முற்றுப்புள்ளி: தாயகம் திரும்பும் தமிழர்
ஜன 04, 2026

சீர்காழி பகுதியில் பிறந்த செல்வம் பால்ராஜ், சவுதி அரேபியாவுக்கு வந்தது இரண்டு ஆண்டுகளாக கட(அடையாள அட்டை) பெற முடியாமல் தவிப்புடன் நாட்களை கழித்து வந்தார். உடல்நிலை பாதிக்கப்பட்டு மன உளைச்சலுடன் இருந்த அவர், தாயக மண் பார்க்க வேண்டும் என்ற ஒரே ஆசையுடன் அசீர் மண்டல NRT & IWF நிர்வாகிகளை நாடி உதவி கோரினார்.
அவரின் வலியை உணர்ந்த முனைவர் நூஹ் அப்துல்லா (அசீர் மண்டல NRT) மற்றும் முனைவர் ஆனந்த் தேவ துரை (அசீர் மண்டல NRT), எந்தவித தயக்கமும் இன்றி அவரது கோரிக்கையை தங்களுடையதாக எடுத்துக்கொண்டனர். இந்திய துணை தூதரகத்தின் மூலம் தேவையான அனைத்து ஆவணங்களையும் ஏற்பாடு செய்து கொடுத்து, அவரின் பயணத்திற்கான கதவை திறந்தனர்.
மேலும் அசன் பாரூக் (அசீர் மண்டல IWF) மற்றும் இஸ்மாயில் ஹுசைன் (அசீர் மண்டல NRT) ஆகியோர் அன்பான வழிகாட்டுதலுடன் அனைத்து நடைமுறைகளும் செய்து, அவர் நிம்மதியாக தாயகத்திற்கு திரும்பும் பாதை அமைத்தார்கள்.
இந்த தருணத்தில் அவரின் கண்களில் நெகிழ்ச்சியும் இதயத்தில் நிம்மதியும் மலரச் செய்த அசீர் மண்டல NRT & IWF நிர்வாகத்தினருக்கு செல்வம் பால்ராஜ் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்
- ஜெத்தாவிலிருந்து நமது செய்தியாளர் M Siraj
Advertisement

