/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
இந்திய சுதந்திர தின விழா; பழங்கள் வழங்கல்
/
இந்திய சுதந்திர தின விழா; பழங்கள் வழங்கல்
ஆக 16, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனாமா: இந்திய திருநாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, சித்றா பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் 100 குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கு, லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்கமும், பியோன் மணி நிறுவனமும் இணைந்து இனிப்புகள், பழச்சாறுகள், தண்ணீர் பாட்டில்கள் மற்றும் பழங்களை வழங்கியது.
லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ் பிரதிநிதிகள் சையத் ஹனீப், ஷஃபீக் மலப்புரம், சக்திவேல், முகமது யூசுப் மற்றும் பியோன் மணி குழு பிரதிநிதி டோபி மேத்யூ மற்றும் ஊழியர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
Advertisement