சரஸ்வதிபூஜை முதல்...
UPDATED : செப் 29, 2025 | ADDED : செப் 29, 2025
மாணவர்களுக்கு வாரியார் சொல்லும் அறிவுரையைக் கேளுங்கள்.''ஆசிரியரிடம் கற்ற நல்ல விஷயங்களை வாழ்வில் பின்பற்ற வேண்டும். பணம் தேடுவதோடு நல்லறிவைத் தேடவும் படிப்பு அவசியம். திருக்குறள், ராமாயணம், மகாபாரதம் போன்ற நுால்களைத் தினமும் படியுங்கள். மாணவர்களுக்கு படிப்புடன் பக்தியும் அவசியம். அதிகாலையில் எழுந்து நீராடி திருநீறு பூசி கடவுளின் திருநாமத்தைச் சொன்ன பின்னரே அன்றாட பணிகளைத் தொடங்க வேண்டும்” சரஸ்வதி பூஜை முதல் இந்த நல்ல பழக்கத்தை கடைபிடிப்போம்.