காமாட்சிக்கு கைக்குத்தல் அரிசி
UPDATED : ஜூலை 26, 2021 | ADDED : ஜூலை 26, 2021
கோயில்களில் அன்னம் நைவேத்யமாக படைக்கப்படும். ஆனால் புதுக்கோட்டை மாவட்டம் சத்திரம் கிராமம் காமாட்சி கோயிலில் அம்மனுக்கு அரிசியை நைவேத்ய மாக படைக்கின்றனர். பெண்கள் வீட்டில் குத்திய கைக்குத்தல் அரிசியை காணிக்கையாக வழங்குகின்றனர். இந்த அம்மனுக்கு மஞ்சள் காப்பு மட்டும் அணிவிக்கப்படும். மஞ்சள் கோயிலுக்கு உள்ளேயே தயாரிக்க வேண்டும் என்பது நிபந்தனை.